html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: July 2006

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, July 06, 2006

 

ரயில் பயணங்களில்.....

எனக்கு எப்பவுமே ரயில் பயணங்கள் பிடிக்கும். பொதுவா இரண்டாம் வகுப்பு பெட்டில பொறவன் அந்த தடவை கொழுப்பெடுத்து போய், 2ன்ட் ஏ.சி. டிக்கட் எடுத்து இருந்தேன். ஒரு ஆசைதான் எப்படி இருக்கும் அதுல போனா அப்படின்னு. பெருசா கற்பனை பண்ணிட்டு தான் போனேன், ஆனா அங்க ஒண்ணுமேயில்ல.. எனக்கு சப்புனு ஆகிப் போச்சு.
பொதுவா நான் போகும் போது, "தம்பி எனக்கு முட்டி வலி, நீங்க அப்பர் பெர்த் எடுத்துகுறீங்களா??? பெட்டி யாருதுங்க?? சாயா, டீ"
இதெல்லாம் கேட்டு கேட்டு பழகிடுச்சா, இதெல்லாம் இல்லாதப்போ நம்ம ஏதோ தப்பு பண்ணிட்டோம்னே தோணிச்சு.
மத்தபடி நான் யார்கிட்டனாலும் உடனே பேசிடுவேன். 2ன்ட் கிளாஸ், ஸ்லீப்பர் கோச்ல எல்லாம் யாரையும் விட்டதில்ல எல்லார் கிட்டயும் பேசிடுவேன். உடன் டிக்கட்னா இன்னும் குஷிதான். அப்படி இருந்தநான், இந்த ஏ.சி ல வந்து தனியா மாட்டிகிட்டேன். ஜன்னல் பக்கம் ஒரு பெருசு உக்காந்து இருந்தாப்ல. பேசலாம்னு போகும் போதே பெரிய இங்கிலீசு புஸ்தகம் ஒண்ண திறந்து வெச்சுட்டார்.. நான் பாக்காத இங்க்லீஷா?? உடனே அண்ணா நகர்ல பேரம் பேசி 40 ரூவாய்க்கு வாங்கின டிஸ்ப்ஷன் பாயிண்ட் எடுத்து படிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பதான் அவன் உள்ளார வந்தான்.
ஆள் பாக்க நீசத்தனமாதன் இருந்ததான். என்ன என்னை விட கொஞ்சம் குள்ளம். பரவாயில்ல விடுங்க.
"ஹாய்"
"ஹாய்"
"நீங்க எங்க திருவனந்தபுரம் போறீங்களா??"
"இல்லைங்க! திருநெல்வேலில இறங்கிடுவேன், நீங்க?"
"எனக்கு திருச்சிதான். சென்னைல ராணா வால்வ்ஸ் இருக்குல்ல அங்கதான் சீனியர் இஞ்சினியரா இருக்கேன். நீங்க?"
"நான் வெட்டிதான்"
"பாத்தா அப்படி தெரியலையே??"
"உங்கள பாத்தா கூட தன் இஞ்சினியர் மாதிரி தெரியலை, நான் எதுனா கேட்டனா?"
"கோவப்படாதீங்க சார்"
"இந்த சார் மோர் எல்லாம் வேணாம், நான் பிரசன்னா"
"நான் கார்த்திகேயன், சுருக்கமா மைக்"
"எப்படியா கார்த்திகேயன சுருக்கினா மைக் வரும்"
"அது நானே எனக்கு வெச்சுகிட்ட பேர்"
நல்லா வைக்குறீங்கடா மைக், ஸ்பீக்கர்னு பேர. கொஞ்ச நேரம் அந்த புக்கையே பாத்துகிட்டு இருந்தேன். ஒரு எழவும் புரியல, வீட்ல போய் அகராதி வெச்சு படிக்கணும்.
"என்னங்க அமைதி ஆகிட்டீங்க, நான் ரொம்ப போர் அடிக்குறேனா"
"இதுக்கு நான் பதிலா உண்மை சொல்லணுமா பொய் சொல்லணுமா?"
"நீங்க பதிலே சொல்ல வேண்டாம், என் வீக்னஸ் அதான் இப்படி எல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கு.."
"அப்படி என்ன வீக்னஸ்?"
"வேண்டாம் விடுங்க பிரசன்னா"
"இல்ல சொல்லுங்க"
"நான் எப்பவுமே இந்த ட்ரெயின்ல தான் ஊருக்கு போவேன். திருச்சி அப்படிங்குறதால நைட் 2 மணிக்கு ஸ்டேஷன் வரும். சரியா தூங்க முடியாது. ஒரு தடவை இதே மாதிரி தான் யாரும் இல்லாத கம்பார்ட்மெண்ட்ல போய்கிட்டிருந்தேன். பயங்கரமா தூக்கம் வந்தது.. அப்படியே கண்ணசந்துட்டேன். திடீர்னு டப்னு ஒரு சத்தம். என்னடானு பார்த்தா ஜன்னல் கண்ணாடில ஒரு கை, ரெண்டு தடவை தட்டிட்டு அப்புறம் காணாம போயிடுச்சு. யார்றானு வெளிய வந்து பாத்தா..."
"பாத்தா??"
"வண்டி ஆத்து பாலத்துக்கு மேல போய்கிட்டு இருந்தது"
"இது சாத்தியமேயில்லை"
"நானும் அப்படித் தான் நினைச்சேன். ஆனா திரும்ப ஒரு முகம். முகம் முழுக்க ரத்தம் என் முன்னாடி வந்து நின்னு, தண்ணில குதிச்சது"
"என்னயா சொல்ற??"
"ஆமாங்க, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி மாஸ்டர் கிட்ட சொன்னேன். அவர் சொன்னார் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையன் ரெண்டு வருஷம் முன்னாடி தவறி விழுந்து செத்து போனான், அதுல இருந்து மாசத்துக்கு ஒரு தடவை இப்படி கம்ப்ளைய்ண்ட் வருதுன்னு சொன்னார்."
"இப்ப இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொன்னீங்க?"
"சும்மா ஒரு அனுபவ பகிர்தல் தான், பிரசன்னா ஒரு சின்ன ஹெல்ப். திருச்சி வரும்போது என்ன கொஞ்சம் எழுப்பி விட்டுட முடியுமா?? நீங்க புக் படிச்சுகிட்டு இருக்கீங்கல்ல, தூங்கபோறீங்கன்னா என்கிட்ட சொல்லிடுங்க சரியா?"
"சரி மைக், அனேகமா தூங்கிடுவேன்னு தான் நினைக்குறேன்"
"பரவாயில்லை, குட் நைட்"
எங்க தூங்க. ஒரு சின்ன சத்தம் பெரிய சத்தம் கேட்டாலே வயிறு என்னமோ பண்ணுது. பாத்ரூமுக்கு தனியா போகவும் பயமா இருக்கு.. என்ன பண்ண??
இந்த ஏ.சி கோச் கூட பெரிய தொல்லை. ஜன்னல் கண்ணாடி வெச்சிருப்பாங்க. வெளில என்ன இருக்குன்னே தெரியாது. எனக்கு உள்ள பயம் + கடுப்பு. என் பேய் கதை மன்னன் நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான்.
சரி வெளில போய் நிப்பம், கொஞ்சம் நல்லா இருக்கும்னு போய் வெளில நின்னா... ஆத்து பாலம். ஆத்தாடினு உள்ள வந்துட்டேன். எதுக்கு வம்பு. இவனாவது உயிரோட இருக்கான். நான் எல்லாம் அப்படி பாத்தா ஸ்பாட் அவுட். அவ்வளவு பயந்த சுபாவம்..
ஆத்து பாலம் வந்துடுச்சுல்லா.. அடுத்து திருச்சி தான், பயல எழுப்புவம்.
"மைக்! திருச்சி வரப் போகுது எந்திரிங்க"
"ஆவ்! தாங்க்ஸ்" கொட்டாவி விட்டுகிட்டே சொன்னான்.
"அது சரி, என்ன மாதிரியே எல்லாரும் எழுப்பி விடுவாங்களா என்ன? அடுத்த தடவை, மொபைல் போன்ல ரெண்டு மணிக்கு அலாரம் வெச்சுடுய்யா. பிரச்சினை இல்லாம போகும்ல"
"எனக்கு அலாரம் வைக்குறது சுத்தமா பிடிக்காது.. ஆனா ஒவ்வொரு வாட்டியும் கரெக்டா எழுந்துப்பேன்."
"எப்படி?"
"சும்மா மனசுல வர்ற எதாவது பேய் கதை சொல்லி கூட வர்ற ஆளை பயமுறுத்திடுவேன். அப்புறம் அவன எழுப்ப சொல்லிட்டு தூங்கிடுவேன். அவன் பயத்துல தூங்காம, கடமை உணர்ச்சியோட என்ன எழுப்பி விடுவான். இதுல அவனுக்கு ஒரு டென்ஷன் நமக்கு ஒரு ஆனந்தம். வரட்டா?"
அப்படினு சொல்லி கிளம்பிட்டான்.
நான் ஙேனு முழிச்சிகிட்டிருந்தேன்.

Sunday, July 02, 2006

 

கல்யாணமாம் கல்யாணம்...

நட்சத்திர வாரத்தின் முடிவுல கல்யாணம், நம்ம நிலவு நண்பனுக்கு. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல.. நிலவு நண்பன பத்தி..வலைப் பதிவாளர்கள் எல்லாருக்கும் நல்லாவே அவரைத் தெரியும்...ஜூலை ரெண்டாம் தேதி அதாவது இன்னைக்கு அருமையான முறையில் நடந்து முடிந்தது.
சனிக்கிழமை எனக்கு நைட் ஷிப்ட். காலைல வந்து ஞானியார் அனுப்புன மின்னஞ்சல்ல வரவேற்பு தனியா இருக்கானு பார்த்தேன் இல்லை.. சரினு சொல்லி காலைல ஒரு 10 மணிக்கு இருக்குறாப்ல மண்டபத்துக்கு போயிட்டேன். வலை நண்பர்கள சந்திக்குறதுல இருக்குற பிரச்சினை சுவாரஸ்யமானது.. பார்க்குற எல்லாரையும் "இவரா இருக்குமோ?" அப்படின்னே தோணும். அப்படித்தான் நான் மண்டபத்துல துபாய் ராஜா சாரைத் தேடினேன். சார் கண்லயே படலை.
சரி!! எனக்கு ஏற்கனவே அவங்க கல்யாண முறை பழக்கம் அப்படிங்குறதால உள்ள போய் உக்காந்து கிட்டேன். உள்ள போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, நிலவு நண்பனோட தம்பி நெஹ்மத்துல்லா, நம்ம செட்னு.. அவரோட பிரண்ட்ஸ் பல பேரை எனக்கு தெரிஞ்சு இருந்தது.. அதனால மிங்கிள் ஆகுறதுல பிரச்சினை இல்லை.
கல்யாணத்துல சம்பிரதாயங்கள் துவங்குவதற்கு முன்னால, மணமக்களை வாழ்த்தி பேச வந்தாங்க. முதல்ல ஒருத்தர் நல்ல கணீர் குரல்ல பேச ஆரமிச்சார். அவர் சொல்ல சொல்ல தான் நம்ம நிலவு நண்பன இன்னும் நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சது. எல்லாரும் அப்படி பாராட்டுறாங்க. சதக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முதற்கொண்டு வந்து வாழ்த்தினாங்க.. எத்தன பேருக்கு இந்த மாதிரி நடக்கும்? ஞானியாரே! ராசிக்காரர் தான் நீங்க..
அப்புறம் சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச பின்னால வரிசைல நின்னு போய் நான் வாழ்த்தினேன். ஏற்கனவே தொலைபேசில பேசி இருந்ததால பெரிய அறிமுகம் ஒண்ணும் தேவைப் படலை. கல்யாணத்துல உபசரிப்பு ரொம்ப நல்லா இருந்தது.. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனி தனி பந்திகள் இருந்தது. நான் எல்லாம் ரெண்டு பிரியாணியும் நல்லா இருக்குதானு பார்த்துட்டேன். சைவ சாப்பாடுல போட்ட கேசரி..டாப் கிளாஸ்..
ஐஸ் வரைக்கும் சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி மேடைக்கு போய் பார்த்தேன்..
"என்ன தல!! யாரையும் காணோம், நான் மட்டும் தான் வந்திருக்கேனா?"
"அப்படி எல்லாம் இல்லையே! சிங் ஜெயக்குமார், ப்ரியன், நிலாரசிகன், துபாய் ராஜா, எல்லாரும் வந்திருந்தாங்களே. நாகை சிவா கால் பண்ணி இருந்தார்.கொஞ்சம் சீக்கிரம் வந்து இருந்தீங்கன்னா அறிமுகமாகி இருக்கலாம்."
அய்யோ மூணு பேரையும் பார்க்காம மிஸ் பண்ணிட்டமேனு இருந்தது.. அண்ணிகிட்ட அறிமுகம் என்னை அறிமுகம் பண்ணி வெச்சார் ஞானியார்.. அப்புறம் விடை குடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் மூணு மாசத்துக்கு இங்க தான இருப்பார் பொறுமையா நம்ம விருந்து குடுத்துக்கலாம்.
இதை துபாய் ராஜா படிப்பார்னு நினைக்குறேன். அவருக்காக..
"என்னங்க போன் நம்பர் எதுக்கு குடுத்தேன்.. கால் பண்ணுங்க தலைவா.. ஊருக்கு போரதுக்கு முன்னாடி பார்க்க வேண்டாமா??"
இது தாங்க நான் இன்னைக்கு உருப்படியா பண்ண காரியம்..
ஞானியும் அண்ணியும் பல வருஷங்கள் இன்னைக்கு இருந்த மாதிரியே சந்தோஷமா இருக்கணும்.
பி.கு. இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் சொல்லிட்டாங்க. "ஜோடிப் பொருத்தம் பிரமாதம்"னு. சுத்தி போட்டுகுங்க!!!

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]