html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: June 2006

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Friday, June 02, 2006

 

சதுரங்கம்..

முதல் முதலா திவ்யா என் கிளினிக்கிற்கு வரும் போது, "கணவனால் கண்டு கொள்ளப் படாத இன்னொரு பெண்"அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவ கேஸ் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு பட்டது. அவள எதோ ஒண்ணு ரொம்ப பாதிச்சிருக்கு. அவள அமைதி படுத்துறது பெரிய கஷ்டமான வேலையா இருந்தது.

"பாலா என்னை ஒரு பொருட்டாவே மதிக்குறதில்ல, அவருக்கு எப்பவுமே அவரோட இன்ட்ரெஸ்ட் தான்"

"ஸ்டாக் மார்க்கெட்??"

" இல்ல! அது அவர் வரைக்கும் இருக்க வேண்டியது தான். ஆனா இவர் வெறியா இருக்குறது செஸ் மேல. எப்போ பாத்தாலும் செஸ் செஸ்னு வாழ்க்கய அனுபவிக்க மாட்டேன்றார்"

"புரியலியே!"

"நேத்திக்கு சாயங்காலம் காலாற நடக்கலாம்னு நான் தான் இவர செஸ் போர்ட் முன்னாடி இருந்து இழுத்துட்டு போனேன். அழகான மாலை நேரம், அமைதியான கோவில், பக்கத்துல நான். நியாயமா மனுஷனுக்கு என்ன தோணியிருக்கணும். அத விட்டுட்டு ராணிய தப்பா மூவ் பண்ணதால தோத்துட்டேன் அப்படிங்க்றார்.தட்டுல என்னமோ இருக்கு சாப்பிடணுமேன்னு சாப்பிடுறார்; நடுராத்திரியில கூரைய வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கார், எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.!"

"ஐயோ! ஆமா பாலா யார்கூட விளையாடுவார், எங்க வெச்சு விளயாடுவார்?"

"ஒரு பொண்ணு வரும் சார் வீட்டுக்கு, அதும் இவர மாதிரி தான் செஸ் பைத்தியம்"

ஆகா!! பிரச்சினைக்கு காரணம் கண்டு பிடிச்சாச்சு! பொறாமை தானா?? அந்த பொண்ண பத்தி இப்பொ கேக்குறது தப்பு. இல்லாத ஒண்ண இவங்களே கற்பன பண்ணி வாழ்க்கைய பாழாக்கிப்பாங்க. திவ்யாவும் அந்த பொண்ண தப்பா நினைக்கல.

"அவங்க ரெண்டு பேரும் என்ன பேசிப்பாங்க?? நல்லா கலகலனு பேசுமா அந்த பொண்ணு."

"நீங்க வேற! ரெண்டு பேரும் சுத்தமா பேசிக்க மாட்டாங்க. மூஞ்சியக் கூட பார்த்துக்க மாட்டாங்க. ஒரு தடவை நான் அவங்களுக்கு டீ கொண்டு போனேன். அப்போ ஒரு வாட்டி தாங்க்ஸ்னு சொன்னாஅவ்ளொதான் நான் அவ வாய்ஸ் கேட்டது."

என்னடா இது இந்த கேஸ் இப்படி குழப்புது.

"சரி திவ்யா! நீங்க ஒண்ணு பண்ணுங்க, அந்த பொண்ண இனி வீட்டு பக்கம் வர விடாம நிப்பாட்டுங்க. செஸ் போர்ட உடைச்சி போடுங்க."

"பண்ணி பார்த்தாச்சு சார்! அவங்க ரெண்டு பேரும் ஃபோன்ல செஸ் விளையாடுறாங்க."

"ஙே!!"

"ஆமா சார்! ஒரு செஸ் போர்ட இமாஜின் பண்ணிகிட்டு. அங்க இருந்து நான் இப்படி பண்ரேன்னு அவ சொல்ல, நான் இப்படி அப்படி பண்ணுவேன்னு இவர் சொல்ல, எனக்கு சந்தேகம் வந்து ஸ்பீக்கர் போன்ல விளயாட சொன்னப்ப தான் எனக்கு தெரிஞ்சது. இந்த மாதிரி விளயாட ரொம்ப கான்ஸென்ட்ரேஷன் வேணும் சார்"

கிழிஞ்சது!!

"நீங்க நாளைக்கு வாங்க மேடம்! நல்ல தீர்வா நான் சொல்றென்."

சும்மா சொல்லிட்டேனே தவிர என்ன பண்ணனு எனக்கு தெரியல. யோசிச்சு பார்த்தப்போ தான் தெரிஞ்சது, அந்த பொண்ண கழட்டி விடணும், அதுக்கு திவ்யாவே விளயாண்டா என்ன? சே இவ்ளோ சின்ன விஷயத்துக்கு இப்படி கஷ்டப்பட்டோமே.

அடுத்த நாள் திவ்யா வந்தப்போ என் டேபிள் மேல ஒரு செஸ் போர்ட். அழகா காயின் அடுக்கு வெச்சிருந்தேன்.

"சார்! என்ன இது??"

"நீங்களே இனி பாலா கூட விளயாடுங்க. அப்போ அவர சுலபமா உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்."

"சரி சார் ஆனா எனக்கு அந்த அளவுக்கு விளையாடத் தெரியாதே!!"

"எல்லாம் கத்துக்கலாம். இப்போ ஆரம்பிக்கலாமா?"

விளையாட ஆரம்பித்தது தான் தாமதம் திவ்யாவோட பாடி லாங்வேஜ் சுத்தமா மாறிப் போச்சு. சும்ம நச்னு விளையாண்டாங்க. இந்த அம்மா நல்ல புத்திசாலியா இருக்கணும் , புருஷன்் விளையாடினத பார்த்துட்டு இவ்வளவு அழகா விளையாடுறது கஷ்டம்.
என் காய்கள் ஒண்ணொண்ணா வெளில போய்கிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்யனு தெரியல. கைய கட்டிகிட்டி உக்காந்துட்டேன்.

"என்னாச்சு இன்னைக்கு, அதுக்குள்ள தோத்துட்டீங்க?"

"என்னாச்சு இன்னைக்கா? நாம இதுக்கு முன்னாடி எங்க விளையாடினோம்?"

நான் கேட்டுகிட்டே இருந்தேன், அவங்க கண்டுக்கவே இல்ல. மெதுவா எனக்கு உரைக்க ஆரம்பிச்சது. அவங்க நான் பாலானு நினைச்சு விளையாண்டுகிட்டு இருக்காங்க. அப்போ அவங்க பாலா கூட விளையாடி இருக்காங்க. அடிக்கடி விளையாடி இருக்காங்க. அதான் இப்போ அவங்க திறமை எல்லாம் காட்டி விளையாடுறாங்க. அப்போ அந்த இன்னொரு பொண்ணு யாரு???

"திவ்யா...திவ்யா. போதும் விளையாடினது. நிறுத்துங்க!!"

அவங்க நான் பேசினத கேக்கவுமில்ல. விளையாட்ட நிறுத்தவுமில்ல.

"திவ்யா" நான் இப்போ கத்தினேன்.

"எங்க எங்க! ஏன் இப்பொ கத்துனீங்க? அவள எங்க?

ஒரு நிமிஷத்துல புத்திசாலியா விளையாடிகிட்டு இருந்த திவ்யா காணாமப் போய், அம்மாகிட்ட அடி வாங்க பயந்துகிட்டு பீரொ பின்னாடி ஒளியுற ஒரு பொண்ண நான் பார்த்தேன்.

"ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! இங்க நம்மள தவிர யாரும் இல்ல. யாருக்கு பயந்தீங்க, எதுக்கு பயந்தீங்க??"

"திவ்யாவுக்கு!" பாதி கலங்கிய கண்ணோடு அவள் சொன்னாள்.

Thursday, June 01, 2006

 

பெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.

நாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது. தேவையானப்போ பெட்ரோல் போட்டு யார் வேனும்னாலும் எடுத்துட்டு போயிட்டு வருவம்.
அப்போ தான் ஒரு விஷயமா என்.ஜி.ஓ காலனி போயிருக்கும் போது, நானும் ஐயப்பா அண்ணனும் ஒரு பொண்ண பார்த்தோம், அது என்னடான்ன சரியான லுக். நம்ம ஐயப்பா அண்ணன் இருக்கார்ல அவர் ஸ்டைலே தனி. ரோட்ல ஒரு பொண்ணு தல நிமிந்துறக் கூடாது.ஸ்டைலா காலர தூக்கி விட்டு "தொல்லை தாங்க முடியலப்பா, இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி முறைச்சு முறைச்சு பார்க்குதுங்க". அண்ணன் அது கழுத்து வலிக்குதுனு சொல்லி கழுத்த திருப்பி இருக்குனு சொன்னாலும் "அது எப்படி நான் இருக்குற பக்கம் திரும்பலாம்?" அப்படின்னு கேக்குற ஆளு. அப்படிபட்ட ஒரு ஆள இந்த பொண்ணு லுக் விட்டு போயிடுச்சு. நான் ஒருத்தன் நிக்குறேன்னு எண்ணமே இல்லாம வண்டியத் திருப்பி கிட்டு அந்த பொண்ணு பின்னாடி போய்ட்டார்.
போய்ட்டு வந்து "டேய் தம்பி! அண்ணனுக்கு பிக் அப் ஆகிடுச்சுடா!" அப்படின்னார். எனக்கு இன்னும் புரியல எப்படி ஐயப்பா அண்ணனுக்கு மட்டும் எல்லா பொண்ணும் விழுது. சரி விடுங்கப்பா அப்படின்னு வந்தாச்சு. இந்த மேட்டர பாளையங்கோட்டை வந்த உடனே போஸ்டர் அடிக்காத குறையா எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. பாலாவுக்கு பொசுங்கல் தாங்கல.
அடுத்து ஒரு வாரம் கழிச்சு, நானும் பாலாவும் படத்துக்கு போகலாம்னு வண்டி எடுத்துட்டு போனோம். அப்ப இதே மாதிரி தான் ஆனா கொஞ்சம் பெரிய பொண்ணு சைக்கிள்ல அதே மாதிரி பாத்துகிட்டே போச்சு.
"நிறுத்து! நிறுத்து வண்டிய நிறுத்து!" பால கத்துனான்.
என்னவோ ஏதோ அப்படின்னு வண்டிய நிப்பாட்டுனா, "அங்க ஒரு பொண்ணு நம்மள பார்த்துகிட்டே போச்சு. என்னானு போய் விசாரிக்கலாமா?"
"எது? நம்மளயா? அது எப்படி?"
"அப்படி இல்லா, நீ வண்டி ஓட்டுன, உன் முகம் அவளுக்கு தெரிஞ்சிருக்க வாய்பில்லை. ஆனா அவ திரும்பி பார்த்துகிட்டே போனா, அதுக்காக அவ என்னதான் பார்த்தானு நான் சொல்ல வரல!"
"நிறுத்து, அந்த பொண்ணுகிட்ட போய் இப்ப என்ன பேசப் போற?"
"ஐயப்பனுக்கு ஒரு உமா கிடைச்ச மாதிரி நமக்கு ஒரு ரமா கிடைக்க மாட்டாளா?"
"இப்பவே சொல்லிட்டேன்! நீதான் பேசணும் எனக்கு அந்த பொண்ணுகிட்ட ஒண்ணும் கிடையாது"
"நீ அவள நிப்பாட்டு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்."
அவன் பேச்ச நான் நம்புவனா! எல்லாம் விதி.
எங்க போறான்னு பாத்து, அவள போய் நிப்பாட்டினேன். பயங்கரமா திரு திருனு முழிச்சா.
பாலா பின்னால இருந்து ஸ்டைலா இறங்கினான், என்னதான் பேசப் போறான் அப்படின்னு நான் பார்க்குறப்பவே, என்ன பாத்து "மாப்ளே! ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லிடு"
"அட சுந்தர பாண்டியா கவுத்துட்டியே"னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, பழைய்ய்ய்ய்ய்ய்ய டெக்னிக் ஒண்ணு யூஸ் பண்ணேன்.
"நீங்க பூர்ணிமா தான?"
"இல்ல என் பேர் சிவசங்கரி"
ஆகா இந்த பொண்ணு பிரச்சினை பண்ணாதுனு ஒரு நம்பிக்கை வந்தது. அப்புறம் அவ எங்க படிக்குறா என்ன ஏதுன்னு கேட்டு வெச்சிகிட்டோம். பிரபலமான கல்லூரி என்பதால் பேர் குறிப்பிடவில்லை. "நான் தினமும் இந்த வழியா தான் கம்ப்யூட்டர் கிளாஸ் போவேன்" அப்படின்னு ஒரு கூடுதல் தகவல் வேற.
"சரி! கிளம்புறோம்" அப்படின்னு கிளம்பினா, "வெரி நைஸ் மீட்டிங் யூ" அப்படின்னு கை குடுத்தா. அதுவரைக்கும் சீன்லயே வராத நம்ம பாலா பாய்ஞ்சு கைய பிடிச்சுட்டான். அன்னைக்கு அவன் போட்ட ஆட்டம் இருக்கே, தாங்க முடியலடா.
இதுல ஒரு மேட்டர் சொல்லியாகணும். சும்மா சுடிதார் போட்டு ஒரு பொம்மைய நிக்க வெச்சா கூட நான் விடமாட்டேன். ஆனா ஏன்னே தெரியல அந்த பொண்ணும் மேல எனக்கு ஒண்ணும் தோணல.
அடுத்த நாளைக்கு கரெக்டா அவ கம்ப்யூட்டர் கிளாஸ் போறேன்னு சொன்ன நேரத்துக்கு நம்ம பய ஆஜர். அந்த பொண்ணும் கிராஸ் பண்ணி போச்சு. ஆனா நம்ம பயல கண்டுக்கல.. அவ்வளவு தான்.
ஒரு அரைமணி நேரம் கழிச்சு நான் போனேன். சபைல* நின்னுகிட்டு இருந்தான். என்னடா அந்தப் பொண்ண பாத்தியான்னு தான் கேட்டேன்.
"சும்மா இரு மாப்ளே! அந்த பொண்ணு ஒண்ணும் நல்ல பொண்ணு மாதிரி தெரியல,எல்லாவன் கிட்டயும் பேசுது, சிரிக்குது எனக்கு அது வேண்டாம். நீ வேணும்னா போ."
"எது? டேய் சும்மா இருந்தவன வண்டிய திருப்ப சொல்லி, இப்ப இப்படி பேசுறியா? அங்க அப்படியே நிப்பாட்டிக்க, இனிமே ஃபாலோ பண்ணு அப்படி இப்படினு எதுனா பேசுன, உங்கய்யா கிட்ட சொல்லிடுவேன்"
இது எல்லாத்தையும் அன்னைக்கு சபைக்கு புதுசா வந்து இருந்த ஒரு பையன் கேட்டுகிட்டு இருந்தான். அவன் பேரு மணி.கராத்தே பிளாக் பெல்ட்.
"பாஸு"
"என்ன?"
"எனக்கு அந்த பிள்ளைய காமிக்கியளா?"
இவன் பொதுவா இப்படி பேசுற ஆள் கிடையாது. அதாவது நல்ல பையன்னு நினைக்க வேண்டாம், தைரியம் பத்தாது. அதனால நான் முன்னாடியே சொல்லிட்டேன். தூரத்துல இருந்து தான் காமிப்பேன், அப்படியே போய் பிக் அப் பண்ணிக்கணும். சரியா?
எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, கரெக்டா நூற்றாண்டு மண்டபம் முன்னாடி நின்னுகிட்டான். பய வரட்டும்னு நானும் இருட்டுல காத்து கிடந்தேன்.
அந்த பொண்ணும் சைக்கிள்ல வந்தா. தைரியமா கை காட்டி நிப்பாட்டிட்டான்.
"பேஷ்! பாலாவுக்கு இவன் பரவாயில்லை"
அடுத்து அவன் வெச்சான் பாருங்க அணுகுண்டு,
"என் நண்பன் உன்கிட்ட பேச ஆசை படுறாப்ல, அங்க நிக்குறான் பாருங்க"
இதுக்கு அவனே பரவாயில்லையேடா..
அந்த பொண்ண சொல்லியும் தப்பில்லை, ரெண்டாவது வாட்டி நான் வழியுறேன், "நீங்க பேசணும்னா நீங்களே நிக்க சொல்லலாமே, யாரோன்னு நினைச்சு போயிருப்பேன், உங்க வண்டிய பாத்து தான் நின்னேன்."
"அடிப் பாதகத்தி!!" மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.
"இல்ல சும்மாத்தான், ஆங், இது என் நண்பன் மணி." இவன கோத்து விட்டு நம்ம தப்பிச்சுகலாம்னு பார்த்தேன்
அவன் ஒரு பெரிய ஜென்டில் மேன் ரேஞ்சுக்கு தலைய லைட்டா ஒருதரம் ஆட்டிட்டு வேற பக்கம் திரும்பிகிட்டான்.
சம்பந்தமில்லாம ஏதோ பேசிட்டு, அவள அனுப்பிட்டு இவன்கிட்ட வந்தேன்.
"ஸாரி பாஸ்! பிள்ள பக்கத்துல வந்த உடனே என்ன பண்ணனு தெரியாம பதட்டத்துல இப்படி பண்ணிட்டேன்."
"என்னவோ! இனி என்ன இதுல இழுக்காத"
"அப்படி சொல்லாதீங்க, நான் அந்த பிள்ளைய சீரியஸா லவ் பண்றேன்."
"எது? இது எப்பலேர்ந்து?"
"இப்பத்தான்! பாத்த உடனே பிடிச்சு போச்சு"
அதெப்பிடிடா உங்களுக்கு மட்டும்.. சரி விடு.
"நான் என்ன பண்ணனும் அதுக்கு.?"
"ஒண்ணும் பண்ண வேண்டாம் தலைவா. என் கூட வந்தால் போதும்."
"என் வரலாறு எல்லாம் தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட!" (இன்னொரு பதிவு)
"என்னவோ விடுங்க நாளைக்கு சாயங்காலம் ஒரு 5.30க்கு சபைக்கு வந்திடுங்க பேசிக்கலாம்"
அடுத்த நாள் நான் வேணும்னே லேட்டா போனேன். அங்க பாத்தா நம்ம பாலா, மணி எல்லாம் உக்காந்திருந்தாங்க. அதுல நம்ம மணிக்கு காது கீதெல்லாம் கிழிஞ்சு ரத்தம். எங்கயோ வண்டில விழுந்திருப்பான்
"வாடா, எங்க போன! உன்னால பாரு பல்லி கில்லெல்லாம் உடைஞ்சிருக்கு!"
"நிறுத்து, இவன் வண்டில விழுந்ததுக்கெல்லாம் நான் எப்படி பொறுப்பு?"
"வண்டில விழுந்தானா, ஹிஹி, சிவசங்கரி ஆள போட்டு அடிச்சிட்டு வந்திருக்கான்."
"என்னது அவளுக்கு ஆள் இருக்கா?"
"நான் தான் சொன்னேன்ல மாப்ளே, அவ எவனப் பாத்தாலும் இளிக்கா, "
"மேல ஒண்ணும் பேசாத, தெரியாதவங்கள பத்தி பேசுறது தப்பு, அதிலயும் பொட்ட பிள்ளைகள பத்து நம்ம ஊர்ல பேசுறது ரொம்ப தப்பு."
இப்ப தான் மணி வந்தான்.
"ஸாரி பாஸ்"
"பரவாயில்ல, என்ன ஆச்சு?"
"நீங்க வர லேட்டாயிட்டா, அதான் நான் அப்படியே நடந்து போகலாம்னு போனேன். நேத்து நாம அந்த பொண்ணு கூட பேசின எடத்துல இன்னொருத்தன் நின்னு பேசிகிட்டு இருந்தான். அதான் எனக்கு கோவம் வந்திட்டு அடிச்சுபுட்டேன்."
கொஞ்ச நேரம் நிறுத்திட்டு, "சாரி பாஸ்"னான் மறுபடி.
"இது எதுக்கு?"
"இல்ல அவன அடிச்சு முடிச்சப்புறம், டேய் உன்ன யார் அனுப்புனான்னு எனக்கு தெரியும், அவன்கிட்ட போய் சொல்லி அவன் என்ன கலரா இருந்தாலும், அழகா இருந்தாலும் அவன்கிட்ட வரமாட்டேன்னு அப்படின்னு அந்த பொண்ணு சொல்லிச்சு"
"என்னடா சொல்ற"
"இன்னொரு விஷயம்"
"இன்னொண்ணா?"
"அந்த அடிபட்ட பய, புதுப்பேட்டை தெரு. பாத்து இருந்துக்குங்க, நான் வரேன்."
"டேய் அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொன்ன நேத்திக்கு"
"அந்த பொண்ணு தான் இன்னொருத்தன லவ் பண்ணுதே, நாம ஒரு லவ் பேர்ட்ஸ பிரிக்க கூடாது."
இவன் என் வாழ்க்கைல மட்டும் விளையாடலாமா? என்ன கொடுமை இது. புதுப்பேட்டை தெரு மோசமான தெருவாச்சே. செட் சேந்தா கும்மி எடுத்துருவாங்களே. இவனுக்கு போய் நான் உதவி பண்ணுவனா? இன்னைக்கு வரைக்கும் அந்த மரண பயத்துலயே வாழ்ந்துகிட்டு இருக்கேன். அதனால தான் சொல்றேன், உங்க பெண்ணாசை மட்டும் இல்லை, உங்கள சுத்தி இருக்குறவன் பெண்ணாசையும் பொல்லாதது..
-----------------
சபை- இது நாங்க எல்லாம் கூடுற எடம். பெருசா சரித்திரமெல்லாம் இல்லை. நேர் மாடில ஒரு டியூஷன் உண்டு. அதுல ஒரு 3 பொண்ணுங்கள ரூட் விட்டோம். அதுகல மிஸ் பண்ணக் கூடாதேன்னு அங்க நின்னு நின்னு அது கூடுமிடம் ஆகிப் போச்சு. திருநெல்வேலி காரங்களுக்கு தெரியும். தெற்கு பஜார் சரஸ்வது ஸ்டோருக்கு எதுத்தால நிப்பம்.

 

இரண்டு நிமிடங்கள்...

திங்கட்கிழமை!! திங்கட்கிழமைனாலே தன்னால அலுப்பு வருது. ஆனா என்ன செய்ய, ஆபீஸ் கிளம்பணுமே. ரொம்ப நேரம் தூங்கின மாதிரி இருக்கே. மணி பார்த்தா 8.30. ஏன் இந்த அமுதா என்ன இன்னும் எழுப்பல?? சும்மா 7.30க்கே கிடந்து குதிப்பாளே?
கிச்சன்லயும் ஆளக் காணோம். எங்க போயிருப்பா?? வீடே அமைதியா இருக்கு.
நேரம் ஆக ஆக எனக்கு கடுப்பு தாங்க முடியல. காலைல இருந்து ஒரு காபி இல்ல, பேப்பர் எடுத்துக் குடுக்கல, அட இதெல்லம் வேணாம்பா, குட் மார்னிங்க் சொல்ல கூட யாரும் இல்லயே!! சரி பேப்பர் இருக்கானு ரேக் ல பார்த்தா, இன்னைக்கு பேப்பரும் இல்லை. கதவ திறந்து வெளில பார்த்தா, ஒரு வாரம் முந்தின பேப்பர்ல இருந்து இன்னைக்கு பேப்பர் வரைக்கும் இருக்கு. என்ன ஆச்சு இந்த பேப்பர் பையனுக்கு??
இப்பொ தான் எனக்கு லைட்டா ஒரு பயம் வர ஆரம்பிச்சது. என் செல் எடுத்து அமுதா நம்பர டயல் பண்ணேன். ரிங் போய்கிட்டே இருந்தது, அவ எடுக்கவே மாட்டேங்குறா!! எங்க போனாளோ? சரி மறுபடியும் ட்ரை பண்ணா வாய்ஸ் மெயில் போச்சு, அதுல அவளுக்கு மெஸேஜ் குடுத்துட்டு, ஃப்ரிட்ஜ் ல இருந்த பிரட் சாப்பிட்டு கிளம்பிட்டேன், நான் என் வேலய பார்க்கலேன்னா என் வேலை புஸ்ஸ்!! மனசுக்குள்ள சங்கடமாதான் இருக்கு. இருந்தாலும் அவளும் ஒரு பட்டதாரி, எங்கயாவது அவசர வேலயா போயிருக்கலாம். கால் பண்ணுவா. ஹ்ம்ம்ம்

வீட்ட விட்டு வெளில வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணி கிளம்பினேன். என்ன எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா என்னால ஒரு மனுஷனையும் பார்க்க முடியல. கடை இருக்கு, பஸ் இருக்கு. ஆனா எதிலயும் ஆட்கள் இல்ல. என்னடா இது?? ஆச்சர்யமா இருக்கே. இது கனவா நினைவானே எனக்கு தெரியல. உடனே திரும்ப வீட்டுக்கு வண்டிய திருப்பிட்டேன். வீட்டுக்குள்ள போகும்போதே ஃபோன் அடிச்சுகிட்டு இருந்தது. அவசர அவசரமா உள்ள போகுறதுக்குள்ள, ரிங் நின்னு போச்சு.

காலர் ஐ.டி ல நம்பர பார்த்தா அது பாலா. பாலா என் சொந்தக் காரன். இப்போ மதுரைல இருக்கான். நான் திரும்ப கால் பண்ண ரிங் போய்கிட்டே இருக்கு எடுக்க மாட்டெங்குறான். என்னது இது???
சரி விடுங்கடானு நேரா ஆபீஸுக்கே வண்டிய விட்டேன். எப்பவும் நிக்குற மாதிரி காரே இல்ல. எனக்கு ஷாக் பழகி போச்சு. உள்ள போனா யாரும் ஆபீஸ்ல இல்ல. நான் மட்டும் தான். சொல்லப் போனா நானே 1 அவர் லேட். ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு. இதுக்கு மேல ஆபீஸ்ல இருந்த எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்னு சொல்லி வெளில வந்துட்டேன்.

இப்போ என்ன பண்ணலாம். மனுஷன் இருக்குற அடையாளமே இல்லை. எதிரி நாடு அணுகுண்டு போடுறேன்னு மிரட்டி எல்லாரயும் வெளியூருக்கு அனுப்பிட்டானா?? இப்போ என்ன செய்யலாம். ரைட் நமக்கு கால் பண்ண ஒரே ஆள் நம்ம பாலா தான்.மதுரை இங்க இருந்து 150 கிலோ மீட்டர் தானே. கிளம்பிப் போய் பார்த்துட்டு வந்திடலாம்னு பைக்க ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சேன்.

சரியா கயத்தாறு தாண்டின உடனே ஒரு லாரி கண்ணுல பட்டது.ஆகா நம்ம இன்னைக்கு காலைல இருந்து பார்த்ததுல மூவிங் ல பார்த்தது இது ஒண்ணு தான். சரி நிப்பாட்டி எங்க இருந்து வருது? அந்த ஊர் நிலவரம் எப்படினு கேக்கலாம்னு வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டு ரோட்ல வந்து கைய காமிச்சேன். பரதேசிப் பய!! வண்டியா ஓட்டுறான். நேரா என்ன வந்து தூக்கிட்டான். அம்மா!! உடம்பெல்லாம் வலிக்குதே. இப்பொ வீட்டுக்கு போனா போதும். மெதுவா கிளம்புவோமா.

வீட்டுக்கு போனா என்ன யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க!! நான் ஒருத்தன் இருக்குறதயே யாரும் கண்டுக்கல, அவங்க அவங்க வேலய பார்த்துகிட்டு இருக்காங்க. என்ன வீட்டு முன்னாடி ஒரே கூட்டம். ஆங்! அங்க அமுதா உக்காந்து அழுதுகிட்டிருக்காளே!! என்ன ஆச்சுனு தெரியலியே?? என்ன பாரு் அமுதா. என்கிட்ட பேசேன்.

"அமுதா" சத்தம் கேட்டு திரும்பி பார்த்தா பக்கத்து வீட்டு மாமி.
"வாங்க மாமி! நீங்களாவது என்னனு கேளுங்க!"
சுத்தம். அவங்களும் என்ன கண்டுக்கவே இல்ல. என்னடா ஆச்சு உங்களுகெல்லாம். சரி மாமி பக்கத்துல உக்காந்துக்கலாம்னு உக்காந்து அவங்க பேசுறத கேட்டுகிட்டு இருந்தேன்.
"எப்படி அமுதா ஆச்சு??"

"என்னத்த சொல்றது மாமி! இவர் ஒரு வருஷமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா இருக்கார். நாந்தான் இவருக்கு எல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன். திடீர்னாப்புல இன்னைக்கு காலைல எதோ கனவு கண்டவர் மாதிரி அமுதா இந்த மெஸேஜ் கிடைச்சதும் எனக்கு கால் பண்ணு அப்படின்னார். எனக்கு என்ன செய்யன்னே புரியல. அவர அப்படியே எடுத்து என் மடில போட்டுகிட்டேன். என்னென்னவோ புலம்பினார். கடைசியில ஏதோ பெரியா பஸ் மோதின மாதிரி முகத்தில வலி காமிச்சார். அப்புறம் அவ்ளொதான் மாமி. எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு! என்ன அனாதயா விட்டுட்டு போயிட்டாரே"
எல்லாம் கேட்டுகிட்டு இருந்த நான் இப்பொ "ஙே" முழிச்சுகிட்டு இருக்கேன்.

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]