html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: இந்துவின் உயிர் மலிவானதா??

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Thursday, May 11, 2006

 

இந்துவின் உயிர் மலிவானதா??

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். அதை உங்களுக்கு அப்படியே நான் தருகிறேன். என்னை யாரும் ஒரு மதத்தை சார்ந்தவன் எனக் கூறுவதை நான் விரும்பவில்லை.
____________________________________________________________________________
பொறியாளர் கே.சூரியநாராயணன் தாலிபான் தீவிரவாதிகளால்் படுகொலை செய்யப் பட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியா அரசாங்கத்தின் நம்பகத்தன்மை இதன் மூலம் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியா தன் பிரஜைகள் வாழும் வெளிநாடுகளில் முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் அவர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்திட வேண்டும்.

தீவிரவாதிகளால் கடத்திக் கொண்டு செல்லப்பட்டு நம் சகோதரர் ஒருவர் இறப்பது இது முதன் முறை அல்ல. முதலில் டிசம்பர் 2005ல் மணியப்பன் ராமன் குட்டி என்ற கேரள சகோதரர், ஆப்கானிஸ்தானத்தில் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டார். அவரது கொலைக்கு முன் அரசுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தும் நமது மத்திய அரசும், கேரள அரசும், ஈ.அகமது (கேரள எம்.பி) மற்றும் மாநில வெளியுறவுத் துறை மந்திரி, இது பற்றிக் கண்டு கொள்ளவில்லை.பின் அவர் ஒரு ரோடு ஓரத்தில் கொலயுண்டு கிடந்ததைத் தான் நம்மால் பார்க்க முடிந்தது.

இரண்டாவதாக சிஜோ ஜோஸ் என்கின்ற கேரள நண்பர். இவர் அமெரிக்காவின் கைதியாக ஈராக் சிறையில் இருந்தவர். கேரள அரசு இவரது விடுதலையைக் கோரியது. மத்திய அரசும் தலையிட்டதால் சிஜோ பத்திரமாக நாடு திரும்பினார்.

மூன்றாவதாக நௌஷத் எனப்படும் நண்பர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தவர், ஒரு கண்ணை இழக்க வேண்டும் என துபாய் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். சக தொழிலாளி ஒருவரின் ஒரு கண் பார்வை பறி போனதிற்கு இவர் காரணமாக இருந்ததால் இந்த தண்டனை எனக் கூறப்பட்டது. *சவுதி அரேபியாவின் சட்டம் ஒரு கண்ணுக்கு ஒரு கண் என்பதில் உறுதியாக் இருந்தது.கேரள அரசும், ஈ.அகமது அவர்களும் நௌஷத்திற்காக கண்ணீர் வடித்தார்கள். இது பற்றி பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

நான்காவதாக, சாம்குட்டி என்பவர் ஈராக் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டார். கேரள அரசும் மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பெயரில் அவர் பத்திரமாக மீட்கப் பட்டார்.

இப்பொழுது நான் எங்கு வருகிறேன் என உங்களுக்கு புரிந்திருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பேர், மணியப்பன் ராமன் குட்டி, சிஜோ ஜோஸ், நௌஷத் மற்றும் சாம் குட்டி. இதில இறந்து போனவர் மணியப்பன் ராமன் குட்டி மட்டுமே. மற்ற அனைவரும் நடவடிக்கைகள் மூலம் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். சாம் குட்டி விவகாரத்தை எடுத்துக் கோண்டோமேயானால், அவர் கடத்தப்பட்ட உடனே இந்திய அரசு ஈராக்கிய அரசுடன் தொடர்பு கொண்டு சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் ஜான் ஜோசப் ஈராக் சென்றார். இந்த முயற்சி பலனளித்தது, சாம் குட்டி பத்திரமாக வீடு திரும்பினார்.

சகோதரர் நௌஷத் அவர்களுக்காக ராஜ்ய சபா உறுப்பினர்கள் முதல் கேரளத்திலிருந்து பலரும் பிரதமர் இந்த விவகாரத்தில் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மீண்டும் இப்பொழுது சூரியநாராயணன் அவர்கள் இறந்து விட்டார்கள். இதற்கு இந்த மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது? இந்து மக்கள் உயிர் அவ்வளவு மலிவானதா? நீங்கள் சிறுபான்மையினருக்கு தோள் குடுங்கள், ஆனால் ஒரு இஸ்லாமிய நண்பரின் கண்ணை விட எந்த விதத்தில் இந்த இந்து மனிதனின் உயிர் மலிவானது??

மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
_________________________________________________________________________
*-ஆதாரமில்லாத தகவல்.

Comments:
--இப்பொழுது நான் எங்கு வருகிறேன் என உங்களுக்கு புரிந்திருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பேர், மணியப்பன் ராமன் குட்டி, சிஜோ ஜோஸ், நௌஷத் மற்றும் சாம் குட்டி. இதில இறந்து போனவர் மணியப்பன் ராமன் குட்டி மட்டுமே--

Raman kutty n surya narrayanan were caught by terror grp rest all different

we know were u come ....
 
எது ஆதாரமில்லாத தகவல்? தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதா?!
 
சரிதான் அதனால ராமன் குட்டிய கொல்றதுக்கு முன்னாடி 48 மணி நேரம் குடுத்தாங்கள்ல, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது??
இது எனக்கு வந்த மின்னஞ்சல் தான், என் கருத்து இல்லை.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சின்னதுரை
 
ஆதாரமில்லாத தகவல், கண்ணுக்கு கண் சவுதி அரேபிய சட்டம் சொல்வது..
 
ராஜீவ் ஸ்ரீநிவாஸன் என்ற ரீடிஃப்.காம் எழுத்தாளர் எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்க.

The value of Hindu life

வஜ்ரா ஷங்கர்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]