html dir="ltr"> நான் பிரசன்னா!!!!!: பெண்ணாசை துரத்துதே!!!

நான் பிரசன்னா!!!!!

திருவாளர் நல்ல பையன்.

Sunday, May 28, 2006

 

பெண்ணாசை துரத்துதே!!!

நான் போன செவ்வாய் காலைல தான் சென்னைல இருந்து, திருநெல்வேலி திரும்பி வந்தேன். வந்த உடனே அம்மா "டேய்! நம்ம கல்லிடைகுறிச்சி மாமாவுக்கு உடம்பு சரி இல்லடா, சுதர்ஸன் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க. நிலமை கொஞ்சம் மோசம் தான். கொஞ்சம் போய் பார்த்துட்டு வர்றியா?"
எங்க கல்லிடைகுறிச்சி மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். பாசாங்கு இல்லாத மனுஷன். அதுக்கு மேல என் மேல ரொம்ப பிரியம் வெச்சிருந்த நல்லவர். அவருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. சொந்தம் என்னவா இருந்தாலும், வயசுக்கு மூத்தவங்கள அண்ணன், அக்கா அப்படின்னு கூப்பிட்டே பழக்கம் ஆகிடுச்சு.
மாமாவ ஐ.சி.யூல வெச்சு இருந்தாங்க. அந்த ஆஸ்பத்திரில என்ன கூத்துன்னா, பேஷன்ட், ஐ.சி.யூல இருந்தா கூட வந்தவங்க தங்க ரூம் கிடையாது. வெளில தான் தங்கணும். அதுவும் போக அந்த இடத்துல கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்ததால ஒரே மண்ணும், சிமெண்டும் மேல விழுந்துட்டு இருந்தது. மதியம் ஒரு 12 மணிக்கு என்னையும் அவங்க கணவரையும் உக்கார சொல்லிட்டு, எங்க அக்கா குளிக்க பக்கத்துல உள்ள ஃபிரண்ட் வீட்டுக்கு போய்ட்டாங்க.
ராத்திரி உடன் டிக்கட்ல வந்ததால கண்ணெல்லாம் பயங்கர எரிச்சல்.
"அத்தான்! நான் படுத்துக்குறேன், எதுனா வேணும்னா எழுப்புங்க" அப்படின்னு சொல்லிட்டு சாய்ஞ்சுட்டேன்.
அவர் நமக்கு பக்கத்துலயே கொஞ்ச நேரம் கழிச்சு சாய்ஞ்சுட்டார். வெளில தான் படுக்க வேண்டி இருந்ததால நல்ல உறக்கம் எல்லாம் இல்ல. திடீர்னு முன்னால மெடிக்கல் கவுண்டர்ல ஒரு பொண்ணு நிக்குறா. என்னாடா தெரிஞ்ச முகமா இருக்கேனு பாத்தா, ஷர்மிளா
பக்கத்துல நம்ம அத்தான், செம தூக்கம். சரி இங்க தான போய் என்னனு கேட்டு வந்திடலாம்னு போனேன்.
"ஷர்மிளா?"
"நீங்க எங்க இங்க?" ஆச்சரியமா என்ன பார்த்து கேட்டா.
"எங்க மாமா அட்மிட் ஆகி இருக்காங்க, நீங்க என்ன இங்க?"
"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்!" சொல்லும் போதே கண்ல தண்ணி.
"ஐயய்யோ! இப்ப எப்படி இருக்கு?"
"ஐ.சி.யூல இருந்து வெளில வந்துட்டாங்க, ஆனாலும் ரொம்ப கஷ்டப்படுறாங்க."
அதுக்குள்ள அவங்க பில் வந்துட்டதால, கிளம்பிட்டாங்க.
திரும்பி பாத்தா, எங்க அத்தான், மந்தகாச புன்னகையோட "என்ன தம்பி! கேர்ள் பிரண்டா?"
"சேசே! அதெல்லாம் இல்ல அத்தான். இந்த பொண்ணுக்கு நான் தான் போன வருஷம் பிராஜக்ட் பண்ணி குடுத்தேன். அப்பவே இவங்க அப்பாவ நல்லா தெரியும். அதான் என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்லை."
"அப்படியா! என்னவோ நேத்திக்கு நைட் பூரா ஜெபம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ரொம்ப கஷ்டம் தான்."
சரினு கேட்டுகிட்டேன். அடுத்த நாள்ல இருந்த நான் வேலைக்கு போகணும், காலைல மட்டும் தான் இருக்க முடியும். சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வந்து, காலைல குடுத்த டிபன் பாத்திரங்கள வாங்கிட்டு போகணும். இது தான் எனக்கு குடுக்கப் பட்ட வேலை. ஷர்மிளா இருக்க வேற என்ன வேணும் சந்தோஷமா ஏத்துகிட்டேன்.
வந்த உடனே அக்கா சொல்லிட்டாங்க "பிரஸ்! சார்ஜர் கொண்டு வரல, உன் சார்ஜர் சாயங்காலம் வரும்போது கொண்டு வந்துடு"
"சரிக்கா"
அடுத்த நாள் ஷர்மிளாவ நான் பார்க்கவே இல்லை. அதுக்கடுத்த நாள் காலைல அம்மா ஆஸ்பத்திரிக்கு டிபன் கொண்டு போய்ட்டு அங்க இருந்து நேரா வேலைக்கு போக சொல்லிட்டாங்க. பொதுவா ஆஸ்பத்திரினாலே போர் அடிக்கும், அதனால டான் பிரவுண் டாவின்ஸி கோட் புஸ்தகத்த எடுத்துகிட்டு போனேன்.
அன்னைக்கு பாத்து, மாமாவ ஜெனரல் ரூமுக்கு கொண்டு வந்துட்டாங்க. உடனே அவர ஸ்கேன் பண்ணனும்னு சொல்லி கூப்ட்டு போய்ட்டாங்க, கூட அக்காவும் போக வேண்டியதா போச்சு. இப்ப ஆஸ்பத்திரில உக்காந்து எல்லா பொருளையும் தேவுடு காக்க நம்மள விட்டு போய்ட்டாங்க.
"அக்கா!" நு ஒரு குரல் திடீர்னு
ஆஹா இந்த குரல எங்கேயோ கேட்டிருக்கோமே, அப்படினு நினைச்சுகிட்டே கதவை திறந்தா, ஷர்மிளா!!!
"ஆனந்தி அக்கா இல்ல?"
"எங்க அக்கா தான் ஆமா உங்களுக்கு எப்படி எங்க அக்காவ தெரியும்?"
"அப்பா ஐ.சி.யூல இருக்கும்போது, நாங்க ரெண்டு பேரும் தான் வராண்டாவுல உக்காந்திருப்போம்."
"அப்படியா? சரி ரொம்ப நாளா காண்டாக்டே இல்லையே, ஒரு கால் பண்ணி இருக்க கூடாதா?"
"இல்ல பிரச்சினை வேண்டாம்னு விட்டுட்டேன்."
எனக்கு முகத்துல அடிச்சா மாதிரி ஆகிடுச்சு, இவகிட்ட என்னத்த போட்டு பேசிகிட்டுனு
"என்ன விஷயமா இப்ப வந்தீங்க?"
"செல்போன் சார்ஜர் வேணும்!"
"எப்பவுமே உங்களுக்கு உதவிகிட்டே இருக்கணும்னு எனகு விதிச்சிருக்கு போல இருக்கு, என் சார்ஜர் தான் எடுத்துகிட்டு போங்க"
"இல்ல பரவாயில்ல, என் தங்க வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வருவா"
"என் சார்ஜர் யூஸ் பண்ண உங்க சித்தப்பா கோவிப்பாரா என்ன?
"அப்படியெல்லாம் இல்ல, சரி தங்கை வந்ததும் குடுத்து அனுப்புறேன்."
எனக்கு நான் பண்றது சரியா தப்பானு தெரியல ஆனா இந்த ஒரு 'நட்பு' தொடரணும்னு ரொம்ப விரும்பினேன்.
தினமும் இந்த மாதிரி சின்ன சின்ன இடக்குகள், புன்னகைகள் எல்லாம் கிடைச்சுகிட்டே இருந்தது, நானும் ரசிச்சுகிட்டே இருந்தேன்.
எங்க மாமாவ டிஸ்சார்ஜ் பண்ற நாள் வந்தது,
சாதாரணமா, அவங்க முன்னாடி போற மாதிரி போய் நின்னுகிட்டு,
"சரிங்க, எங்க மாமாவ வேலூர் சி.எம்.சில காட்ட சொல்லிட்டாங்க. இன்னைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ். அப்பாவுக்கு என்ன சொல்றாங்க?"
"ஒண்ணும் சொல்ல மாட்டேன்றாங்க, அதான் பிரச்சினையே, இப்பவே முப்பத்தஞ்சு வரைக்கும் போயிடுச்சு."
"நான் கண்டிப்பா கடவுள வேண்டிக்குறேங்க! அப்ப வரட்டுமா?"
"மறுபடியும் நம்ம பார்க்கவே முடியாதா?"
"இல்ல! அப்படி சொல்ல முடியாது, இப்ப பாருங்க, இந்த ஆஸ்பத்திரில இந்த சூழ்நிலைல நாம சந்திப்போம்னு எதிர்பார்த்தமா என்ன?"
"நாம கடைசியா அந்த ஹோட்டல்ல பேசினது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு"
"எனக்கும் அத மறக்க முடியாது, உங்க தங்கச்சி ஒரு விஷயம் சொன்னாங்க..."
"என்ன சொன்னா?"
"உங்களுக்கும் என்ன பிடிச்சிருந்ததுன்னு.."
உடனே முகத்த வேற பக்கம் திருப்பிகிட்டு, ஒரு நிமிஷம் கழிச்சு
"இப்பவும் சொல்றேன், எனக்கு உங்கள பிடிக்கும், ஆனா நீங்க எந்த தப்பான முடிவுக்கும் வர வேண்டாம்"
"என்னங்க நீங்க, என்ன பிடிச்சிருக்குனு சொல்லி இருக்கீங்க, நான் என்ன தப்பா எடுத்துக்க போறேன்."
"இல்ல, நான் சும்மா சிரிச்சதுக்கே, வீட்டுக்கு கால் பண்ணி எனக்கு நல்லா பூசை வாங்கி குடுத்தீங்க, இப்ப இப்படி சொன்னத்துக்கப்புறம் என்ன செய்வீங்களோ?"
"அன்னைக்கு சித்தப்பா ரொம்ப அடிச்சுட்டாங்களா?"
"பச்! ஆமா, ஆனா எனக்கு வலிக்கல."
"ஏன்?"
"நீங்க எனக்கு பேச முயற்சி பண்ணி இருக்கீங்க அப்படிங்குறதே எனக்கு ரொம்ப சந்தோஷம்..சரி அம்மா ரூம்ல தனியா இருப்பாங்க. நான் வரட்டுமா.. உங்க நம்பர் இன்னும் என்கிட்ட இருக்கு. I will surely call you someday..bye"
இப்ப இந்த பொண்ணு என்ன சொல்ல வருது. வீட்ல அடி விழுது பேசாத அப்படின்னா, இல்லை நீ கால் பண்றது எனக்கு பிடிச்சிருக்குன்னா?
ஒரு மண்ணும் புரியல, என்னமோ போங்க!!

Comments:
theliva elaina ennum 5 varusathukku eppadi pollambikittu irukkaporathu nichayam.

idhu unnmaiyai irrukkum patchathil.

Prabhu
 
பிரசன்னா,

சத்தியமா என் மனதைத் தொட்டு சொல்றேங்க... நல்ல அருமையான படைப்பு. இது நிஜமாக நடந்ததா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால் நல்ல காதல்கதை எழுதும் திறமை உங்களிடம் இருக்கிறது.

வளருங்கள்.
 
நன்றி Doondu சார். இந்த மாதிரி ஊக்கத்துல தான் நான் எழுதிகிட்டே இருக்கேன். மறுபடியும் ரொம்ப நன்றிங்க!
 
எல்லா இடத்திலயும் அது தான் சார். ஆனா, என்னால சட்டுனு ஒரு முடிவு எடுத்துட்டு வெளில வர முடியல அப்படிங்குறதுதான் பிரச்சினையே. இதே மாதிரி அடுத்தவனுக்கு நடந்த மேட்டர் ல எல்லாம் நான் ரொம்ப தெளிவா இருந்திருக்கேன்...
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி பிரபு சார்..
பிரசன்னா
 
இந்தமாதிரி இன்னும் எத்தனை
கைவசம் இருக்கு?
 
வே நீரு நல்லா காதலப் பத்தி சொல்லுதீரு... எனக்கு பழய நியாபகம் எல்லாம் வருதய்யா
 
really a good article with sharmi jayawardhanae link pras.

I have read few of ur blogs alone...i hope this is d best!

its ok! wat abt the "RAIN SHYLU"!!

Good alone can Judge Him 'huh???

lol

really a good blog!!

ps: hahahah dai pras... in the movie "Kaadhal", a sithappa charac came naa...while i was readin the msg, the same characters came in to my mind! mind la vachukkO...varataan murugaaaa....

Anbu Nanban...
Mike
 
மனசு குறுகுறுன்னு இருக்குமே?
 
///இந்தமாதிரி இன்னும் எத்தனை
கைவசம் இருக்கு?///
நம்ம அனுபவம் எல்லாம் நிலவெல்லாம் ரத்தம் ரேஞ்சுக்கு பெருசு. இப்ப தான 4ம் பாகம் வந்திருக்கு. போக போக பார்த்துக்கலாம்..
பிரசன்னா,
 
/// வே நீரு நல்லா காதலப் பத்தி சொல்லுதீரு... எனக்கு பழய நியாபகம் எல்லாம் வருதய்யா///
வாங்க பங்காளி, திருநெல்வேலில காதல் கதைக்கு மட்டும் பஞ்சமே இல்லை..
நீங்களும் அதைப் பத்தி பதியலாமே.
பிரசன்னா
 
வாங்க மைக், எங்கெல்லாம் வரணுமோ அங்கெல்லாம் வராதீங்க, அய்யோ இத அந்தப் பய படிச்சிரக் கூடாதேனு நினைச்சா, படிச்சுட்டு பின்னூட்டம் வேறயா?? உம்ம சுட்டி எல்லாம் குடுத்து சென்னை தமிழ் டீன்ஸ் பதிவு போட்டேன்ல அங்க ஆளக் காணோம்.
இப்பதான நான் ஷர்மிளிக்கே வந்திருக்கேன், இன்னும் பூர்ணிமா, அனன்யா, அனு, சுகன்யா, அமுதா எத்தன எபிஸோட் இருக்கு. அதுக்குள்ள அவசரப் பட்டா எப்படி??
பிரசன்னா
 
///மனசு குறுகுறுன்னு இருக்குமே?///
அதெல்லாம் வார்த்தைல விளக்க முடியாது.. குறு குறு ம்ம் சொல்லலாம்..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

Archives

April 2006   May 2006   June 2006   July 2006   April 2007  

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]